Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், தாழ்வுபாட்டு கடற்கரையோரத்திலுள்ள மீன்வாடியொன்றில் சுமார் 50 கிலோகிராம் நிறை கொண்ட உயிரிழந்த கடல் ஆமையொன்றை மீட்டுள்ளதுடன், மேற்படி வாடியின் உரிமையாளரை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக அம்மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேற்படி மீன்வாடியில் கடல் ஆமையொன்று பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியிலுள்ள கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வாடிக்குச் சென்ற கடற்படையினர், உயிரிழந்த ஆமையை மீட்டுள்ளதுடன், பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இந்நிலையில், சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
54 minute ago