2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடலில் மூழ்கி ஒருவர் பலி

Niroshini   / 2021 ஜூலை 19 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - கெளதாரிமுனை கடலில்  மூழ்கி ஒருவர்  உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - மீசாலை பகுதியை சேர்ந்த 30 வயதான தபாலக உத்தியோகத்தரே, இவ்வாறு
உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து நண்பர்களோடு  நேற்று (18),
கெளதாரிமுனைக்கு  சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்குள்ள கடலில் குளித்துள்ளனர்.

 இதன்போதே, குறித்த இளைஞன் கடலில் மூழ்கியுள்ளார். கடலில் மூழ்கிய இளைஞனை  நண்பர்கள்  மீட்டு பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் செல்லும் வழியில் குறித்த இளைஞன்
உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .