2025 ஜூலை 05, சனிக்கிழமை

கண்டாவளை காணியைத் தோண்டினாலும் ஆயுதங்கள் இல்லை

George   / 2016 ஜூன் 23 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாஸ்கரன், என்.கிருஸ்ணகுமார், எஸ்.தவசீலன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  சுண்டிக்குளம், உழவனூர் 10ஆம் கட்டைப் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட ஆயுதங்களைத் தேடி, செவ்வாய்க்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின்போது எவ்வித ஆயுதங்களும் கண்டெடுக்கப்படவில்லை. 

இந்நிலையில், அப்பகுதியில் ஆயுதங்கள் இருப்பதற்கான எதுவித ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அகழ்வுப் பணி கைவிடப்பட்டுள்ளது. 

மேற்படி காணியில் வெடிபொருட்கள் இருப்பதாக விசேட குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, இது தொடர்பில் தர்மபுரம் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுசென்ற  குற்றத்தடுப்பு பொலிஸார், தர்மபுரம் பொலிஸார் ஊடாக அவ்விடத்தைத் தோண்டுவதற்கான கிளிநொச்சி நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றனர்.

அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து, குற்றத் தடுப்புப் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மற்றும் தர்மபுரம் பொலிஸார் ஆகியோர் இணைந்து, அவ்விடத்தில் அகழ்வுப் பணியினை மேற்கொண்டனர். இருப்பினும், அங்கு ஆயுதங்கள் எவையும் காணப்படாத நிலையில், அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .