2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கண்டாவளை பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லை

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திலுள்ள 24 பாடசாலைகளில் கூடுதலான பாடசாலைகள் போதிய அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் ஆளணி வளப்பற்றாக் குறைகளுடன் இயங்கி வருவதனால் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட கண்டாவளைக் கல்விக் கோட்டத்தில் இரண்டு 1 ஏபி பாடசாலைகள் மூன்று 1சீ பாடசாலைகள் உட்பட  24 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இந்தப் பாடசாலைகளில் சுமார் 5456 மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் 341 ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புன்னைநீராவி, பிரமந்தனாறு, கல்லாறு, இராமநாதபுரம், கல்மடுநகர், நாகேந்திரபுரம் உள்ளிட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உள்ளிட்ட பாட ரீதியான ஆசிரியர் பற்றாக்குறையே அதிகம் காணப்படுவதாக மாணவர்களின் பெற்றோர்களால் பல்வேறு தரப்பிரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆசிரிய ஆளணி, வளப்பற்றாக்குறை என்பதை விட குறிப்பிட்ட சில பாடசாலைகளில் பௌதீக வளப் பற்றாக்குறைகளும் நிலவி வருகின்றது. பாடசாலைகளின் தேவைகளை நிறைவு செய்து, தமது பிள்ளைகளின் கல்விக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X