2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கண்டாவளையால் 1,050 பேர் பாதிப்பு

Princiya Dixci   / 2016 மே 16 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

தற்போது நாடாளவிய ரீதியில் பெய்துவரும் கடும்மழை காரணமாக கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் 1,050 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டாவளை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் சிவபுரம் பகுதியில் சுமார் 20 குடும்பங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவர்களில் 3 குடும்பங்கள் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கட்டைக்காட்டு கிராமத்திலும் சுமார் 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தால் அந்த கிராமத்துக்கான போக்குவரத்து  தடைப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக வீடுகளில் வசித்து வரும் மக்களே இவ்வாறு வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X