2025 ஜூன் 04, புதன்கிழமை

கண்டாவளை பிரதேச செயலர் உயிரிழப்பு

Editorial   / 2018 மார்ச் 27 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கண்டாவளை பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் நேற்று (26) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கடமை வேளையில், மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது, உயிரிழந்துள்ளார்.

கோ.நாகேஸ்வரன், முன்னர் கரைச்சி பிரதேச செயலராக கடமையாற்றி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு மாற்றம் பெற்று கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .