2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலி

George   / 2016 ஜனவரி 30 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகன் தவசீலன்

முல்லைத்தீவு  மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  நட்டாங்கண்டல் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை  இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், 50 வீட்டுத்திட்டம் பாண்டியன்குளம் நட்டாங்கண்டல் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சந்திரபாலன் சந்திரகுமார் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, நட்டாங்கண்டல் பகுதியை சேர்ந்த தங்கராசா குணதீபன் என்ற நபர் இந்தச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார். மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X