Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 30 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கில் இரு குழுக்களுக்கிடையில் இன்று சனிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற கைகலப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மாந்தை கிழக்கின் நட்டாங்கண்டல் சிறாட்டிக்குளம் வயல்வெளிப் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் பாண்டியன்குளம் 50 வீட்டுத்திட்டத்தினைச் சேர்ந்த சந்திரபாலன் சந்திரகுமார் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நட்டாங்கண்டலைச் சேர்ந்த தங்கராசா குணதீபன் (வயது 30) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago