2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கல்வியற்கல்லூரிகளில் மீண்டும் அழகியற் பாடங்கள்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தேசிய கல்வியற் கல்லூரிகளில் போதிக்கப்பட்டு, கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிறுத்தப்பட்ட அழகியற் பாடங்கள் மீண்டும் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ்.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரியில் மொழிக் கற்கை கூடம், இன்று வியாழக்கிழமை (10) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

'நிறுத்தப்பட்ட அழகியற் கற்கைகள் யாழ்ப்பாணம், ஸ்ரீபாத மற்றும் வயம்ப ஆகிய தேசிய கல்வியற் கல்லூரிகளில் மீண்டும் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அழகியல் கலைகளின் அவசியத்தை உணர்ந்து, அதற்கான மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மீண்டும் கொண்டுவரப்படவுள்ளது' என்றார்.

இதேவேளை, 'கல்வியற் கல்லூரிகளில் இதுவரை காலமும் டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படுகின்றது. அதனை பட்டச் சான்றிதழாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், கல்வியற் கல்லூரிகளை சர்வதேச தரத்துக்கமைய மாற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றன. கல்வியற் கல்லூரிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X