Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - பரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள காணியை விவசாயம் செய்வதற்காக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பிரித்து வழங்குவதாக, 2014ஆம் ஆண்டு உறுதிமொழி வழங்கப்பட்ட நிலையில், பலவருடங்கள் கடந்தும் அது நிறைவேற்றப்படவில்லை என்று, பரசங்குளம் கிராம அபிவிருத்திசங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கிராம அபிருத்திச்சங்கத்தினர் கூறுகையில்,
பரசங்குளம் பகுதியில் வசித்துவரும் தமக்கு இந்தப் பகுதியில் அமைந்துள்ள குளத்தின் கீழ் விவசாயம் செய்வதற்காக ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்குவதாக வவுனியா வடக்கில் அந்தக் காலப்பகுதியில் பதவியில் இருந்த பிரதேச செயலாளர் உறுதி அழித்திருந்தார் என்றனர்.
அதற்கமைவாக, அந்தப்்பகுதியில் அமைந்துள்ள குளம் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் மக்களின் பூரண ஒத்துழைப்போடு புணரமைக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்த அவர்கள், ஆயினும், குளம் புனரமைக்கப்பட்டு 6 வருடங்கள் கடக்கின்ற நிலையில், தமக்கு வழங்குவதாக சொல்லப்பட்ட விவசாயக்காணி இதுவரை வழங்கப்படவில்லை எனவும் சாடினர்.
குறித்த விடயம் தொடர்பாக காணி ஆணையாளர், பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பிற்கும் நாம் எமது கோரிக்கையை தெரிவித்துவருகின்ற நிலையில், தமது பிரச்சனையை எவரும் தீர்ப்பதற்கு முன்வரவில்லை என்றும், அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
"குறித்த காணி 1975 ஆண்டுக்கு முன்னர் சிலருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் அது கைவிடப்பட்டநிலையில் வனவளத்திணைக்களத்தால் விக்ஸ் மரங்கள் நாட்டப்பட்டு, காடு மீள் உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது.
"இந்த நிலையில், தற்போது எமக்கு வழங்குவதாக சொல்லப்பட்ட காணியில் வேறு நபர்கள் விவசாயம் செய்துவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
"நாம் அன்றாடம் கூலித்தொழிலை நம்பியே வாழ்க்கை நடாத்திவருவதுடன்,தற்பொது கால் ஏக்கர் காணிகளிலேயே வசித்துவருகின்றோம். எனவே, விவசாய காணி எமக்கு வழங்கப்படும் பட்சத்தில் எமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியும். அதிகாரிகள் எமது பிரச்சினையை விரைவாக தீர்ப்பதற்கு முன்வரவேண்டும். இல்லையேல், குறித்த காணி எமக்கு வழங்கப்படாது என்று எழுத்துமூலமாக தெரிவிக்க வேண்டும்" என்று கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago