2025 மே 05, திங்கட்கிழமை

கிராம அபிவிருத்தி சங்க தலைவரின் மகன் வாளுடன் கைது

Niroshini   / 2020 நவம்பர் 16 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு - தேராவில் கிராம அபிவிருத்தி சங்க தலைவரின் மகன், நேற்று (15) வாளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடித்தத்தில், இவ்வாறான நிலையில் கிராமம் எவ்வாறு உருப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தைக் கட்டிக்காக்க வேண்டிய கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரின் மகனே கிரமாத்தை சீர்குலைக்க வாளுடன் நடமாடித்திரிகின்ற நிலையில், கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் அப்பதவியில் இருக்க தகதியற்றவர் என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X