2025 ஜூன் 04, புதன்கிழமை

கிளிநொச்சியில், 14 ஆயிரத்து 415 வீடுகள் தேவை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஏப்ரல் 03 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 14 ஆயிரத்து 415 குடும்பங்களுக்கான வீட்டுத்தேவைகள் காணப்படுவதாக மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்;வாண்டுக்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று (02) மாவட்டசெயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு 41 ஆயிரத்து 246 வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை காணப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு வரை 25 ஆயிரத்து 564 வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. இதனைவிட கடந்த ஆண்டிலே 867 வீடுகளுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இவை தவிர மாவட்டத்தில் 14 ஆயிரத்து 415 வீடுகளின் தேவைகள் காணப்படுகின்றன.

இந்த சந்தர்ப்பத்தில், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைச்சு 7ஆயிரம் வரையான வீடுகளை 2018ஆம் ஆண்டிலிருந்து அமைப்பதுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

எனினும் இது தொடர்பில் இறுதியான கலந்துரையாடல்கள் எதுவும் நடைபெறவில்லை. இது தொடர்பில் பிரதேச செயலாளர்கள் விரைவாக செயற்பட வேண்டும். என்றும் அதேபோல் மீள்குடியேற்ற அமைச்சின், நீண்ட காலமாக இடம்பெயர்ந்தவர்களுக்கான செயலணி மூலமாக 50 வீடுகள் 2018ஆம் ஆண்டில் அமைப்பதுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதைத்தவிர தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முன்மொழிவுகளின் அடிப்படையில் 171 வீடுகளை அமைப்பதுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .