2025 ஜூன் 02, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் குடும்பப் பெண் கொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

எஸ்.என். நிபோஜன்   / 2018 செப்டெம்பர் 01 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
கிளிநொச்சியில் குடும்பப் பெண் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைதான கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிருஸ்ணகீதன் என்பவரை யாழ்  சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்த பின்னர் 
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெசிந்தன் சந்தேகநபரை இன்று பிற்பகல் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை உண்மை என மன்றில் சந்தேகநபர் ஏற்றுக் கொண்டார். 
 
இதன் பின்னர் சந்தேக நபரை  இம்மாதம் 14 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .