2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் தாயும் மகளும் வீட்டுக்குள் எரிந்த நிலையில்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 23 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்ரமணியம் பாஸ்கரன், மு. தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி புன்னைநீராவியில் தாயும் அவரது 17 மகளும் தீயில் முற்றாக எரிந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 11 .50 மணியளவில் தாயும் தனது 17 வயது மகளும் தீயில் முற்றாக எரிந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தருமபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்

இச்சம்பவம் இடம்பெற்றபோது குடும்பத் தலைவனும், மகனும் வெளிமாவட்டத்தில் தொழிலுக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையா தற்கொலை என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X