2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் விபத்து: சிறுவனுட்பட மூவர் படுகாயம்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 04 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி ஏ-9 வீதியிலுள்ளஅன்னை இல்லம் சந்திப் பகுதியில், இன்று (04) காலை இடம்பெற்ற விபத்தில், பாலர் பாடசாலைக்குச் சென்ற சிறுவன் உட்பட, மூவர் படுகாயமடைந்து, கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியிலிருந்து, கிளிநொச்சி சந்திப் பகுதி நோக்கி ஒரே திசையில் பயணித்த, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றது.

முன்சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், பாலர் பாடசாலைக்கு திரும்ப முற்பட்ட போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .