Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 மே 16 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரிலிருந்து கைதிகள் எண்மரை ஏற்றிக்கொண்டு, வவுனியா சிறைச்சாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறைச்சாலை பஸ், மன்னார் - மதவாச்சி பிரதான வீதி சிறுநாவற்குளம் சந்தியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை விபத்துக்குள்ளானதில், கைதிகள் மூவர் காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த மூவரும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஏனைய 05 கைதிகளும் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று என்று மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரில் இருந்து 08 சிறைக்கைசிகளை ஏற்றிக்கொண்டு வவுனியா சிறைச்சாலைக்குச் சென்ற பஸ்ஸே, தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
இதன்போது காயமடைந்த 03 கைதிகள், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய 05 கைதிகளும் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அப்பகுதியில் கூடி நின்ற மக்களுடன் கலந்துரையாடியதோடு, இவ்விபத்துக் குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
57 minute ago