Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், செல்வநாயகம் கபிலன்
கிளிநொச்சி, தட்டுவன் கொட்டிப் பகுதியில் அனுமதியின்றி அரச காணியில் உழவு இயந்திரத்தில் மணல் அகழ்ந்த நபருக்கு 1 மாதச் சிறைத் தண்டனையும், 2 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, புதன்கிழமை (21) தீர்ப்பளித்தார்.
அனுமதிப்பத்திரமின்றியும் இலக்கத்தகடு இன்றியும் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்;றிய ஒருவரை கைது செய்;;த பொலிஸார் அந்நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது, அந்நபர் ஏற்கெனவே இவ்வாறான குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டவர் என்பதையும் பொலிஸார், நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இதன்போது, அனுமதியின்றி மணல் ஏற்றியமைக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் இலக்கத்தகடற்ற வாகனம் பயன்படுத்தியமைக்கு 20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago