2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிவில் பாதுகாப்பு படையாளிகளை நீக்கி முன்பள்ளி ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இயங்கி வரும் முன்பள்ளிகளில் பணியாற்றும் இராணுவக் கட்டமைப்பின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்பு படையாளிகளை நீக்கி முன்பள்ளி ஆசிரியர்களை நியமிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இயங்கி வரும் முன்பள்ளிகளில் கடமையாற்றி வந்த முன்பள்ளி ஆசிரியர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவக் கட்டமைப்பின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் படையாளிகளாக நியமிக்;கப்பட்டு இராணுவக் கட்டமைப்பின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதுடன், முன்பள்ளிகள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றன.
 
இதனால் குறிப்பிட்ட சில முன்பள்ளிகளின் செயற்பாடுகள், சிறார்களின் நலன்கள் என்பவற்றை கண்காணிக்க வேண்டிய வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வலயக் கல்வித்திணைக்களம் என்பன இவற்றைக் கண்காணிக்கவோ அல்லது தடையிடமுடியாத நிலை காணப்படுகின்றது.
 
முன்பள்ளிகளை நிர்வகிக்கக் கூடிய அதிகாரம் வடமாகாண கல்வி அமைச்சுக்கு உள்ளபோதும் இன்று வரையும் இராணுவ கட்டமைப்பின் கீழே இருந்து வருகின்றன. இதனால் முன்பள்ளிகளின் நிர்வாக செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
 
எனவே, சிவில் பாதுகாப்பு படையாளிகளாக நியமிக்கப்பட்டுள்ள முன்பள்ளி ஆசிரியர்களை நீக்கி புதிய ஆசிரியர்களை நியமிக்கவோ அல்லது சிவில்பாதுகாப்பு படையாளிகளாக நியமிக்கப்பட்டு, இராணுவ கட்டமைப்பின் கீழ் கொடுப்பனவுகள் பெற்று வரும் முன்பள்ளி ஆசிரியர்கள், கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்;படவேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 25ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்ற கரைச்சிப்பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பலரால் குறித்த முன்பள்ளிகள் இராணுவத்தினரின் கட்டமைப்;புக்குள் இருப்பதனால் கலை கலாசார சமூக பிரச்சனைகள் காணப்படுகின்றன.
 
இந்த நிலையில் இது தொடர்பாக பெற்றோர்கள் ஏனையோர் தடையிடமுடியாத நிலை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
 
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் இரண்டு மூன்று தடவைகள் பேசியுள்ளதுடன், ஜனாதிபதிக்கும் கடிதம் ஒன்றினையும் அனுப்பியிருந்தேன். இதனை  விரைவில் மாற்றியமைத்துத் தருவதாகவும் பதில் அனுப்பியுள்ளார் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X