Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 மார்ச் 16 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் காக்கையன் குளம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு சிறுவர்கள் பாதுகாப்பற்ற தோட்ட கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
முஹமட் சம்ரான் (வயது-5) மற்றும் முஹமட் அஸ்ஹான் (வயது-7) ஆகிய இரு சிறுவர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சகோதரர்கள் இருவரும் நேற்று (15) மாலை காக்கையன் குளம் கிராமத்தில் உள்ள தமது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது தாய் தனது மூன்றாவது பிள்ளையை கவனித்தவாறு வீட்டில் இருந்துள்ளார். வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குறித்த இரு சிறுவர்களையும், காணாத நிலையில் தாய் தேடியுள்ளார்.
இதன்போது, வீட்டின் பின்புறமுள்ள பாதுகாப்பற்ற தோட்டக்கிணற்றில் குறித்த இரு சிறுவர்களின் சடலங்களும் தென்பட்டுள்ளது.
இதனையடுத்து மடு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், வைத்தியசாலைக்குச் சென்ற மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனையின் பின் சடலங்களை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
7 hours ago
8 hours ago
05 Jun 2025