Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 மே 11 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடரும் சட்டவிரோத மீன்பிடிகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் தொழில் பாதித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, புதன்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் சட்டவிரோத மீன்பிடி அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சமாசம் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர், ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர் ஆகியோரிடம் சமாசத்தால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை.
நாயாற்றுப் பக்கமாக வெளிச்சம் பாய்ச்சி தொழிலில் ஈடுபடும் பிறமாவட்ட கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. இதன் காரணமாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago