2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சட்டமா அதிபர் திணைக்கள வவுனியா விடுதி திறந்துவைப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கான உத்தியோக விடுதி, வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (10) திறந்து வைக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது கட்டடப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இக்கட்டடத்தை, சட்டமா அதிபர் தபேர டி லிபேரா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்தக் கட்டடம், தற்போதைய அரசாங்கத்தின் பங்களிப்போடு, இராணுவத்தினரின் நிர்மாணிப்பு பணியில் கட்டப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில், சட்டமா அதிபர் திணைக்கள நிர்வாக பிரிவு அதிகாரி உட்பட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், நீதிபதிகள், வவுனியா அரசாங்க அதிபர், வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X