2025 ஜூன் 04, புதன்கிழமை

சபை அமர்வில் கதைப்பதற்கு கட்சி விடயங்கள் தவிர்ப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

கட்சி சார்பான விடயங்களை, சபை அமர்வில் கதைப்பதை தவிர்ப்பதென, புதுக்குடியிருப்புப் பிரதேசச் சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்புப் பிரதேசச் சபையின் 7ஆவது அமர்வு, இன்று (06) புதுக்குடியிருப்புப் பிரதேசச் சபைத் தவிசாளர் செ.பிறேமகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது.

கடந்த சபை அமர்வில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபை” என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிந்த ஏனைய கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்து, போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அன்றைய தினம் செய்திச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும், நேற்றைய அமர்வில், அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், ஊடகங்கவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, சபையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வந்த நிலையிலேயே, கட்சி சார்பான விடயங்களை, சபை அமர்வில் கதைப்பதை தவிர்ப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .