2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் வவுனியா இளைஞன்

Niroshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

சார்ஜாவின் 7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடல், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேற்படி ஒன்றுகூடலில், இலங்கை பிரதிநிதியாக, சாரணர் சங்கத்தின் புலைமைப்பரிசில் பெற்ற, வவுனியாவைச் சேர்ந்த ஸ்ரீகரன் கேசவன் பங்குபற்றவுள்ளார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முகாமைத்துவப்பீட மாணவனான இவர், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனுமாவார்.

மேலும், இவர், 2012ஆம் ஆண்டு இலங்கையின் சாரணர் உயர் விருதான ஜனாதிபதி விருதை பெற்றதுடன், வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் பொருளாளராகவும் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X