Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
உலக பூமி தினத்தை முன்னிட்டு வடமராட்சி, மணற்காடு சவுக்குகாட்டை பாதுகாப்பதற்கு விசேட செயற்றிட்டம் 1,500 தொண்டர்களின் உதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்படுகின்றது.
மணற்காடு சவுக்கு காடுகளுக்கு தீ வைத்து, சவுக்கு மரங்களை விறகுக்கு எடுக்கும் செயற்பாடு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனால் சவுக்கு காடு அழிவடையும் நிலையில் உள்ளது. இதனைப் பாதுகாக்க வேண்டி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவம், பொலிஸார், பல்கலைக்கழக மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் காலை 7 மணி முதல் 2 மணி வரையில் இச் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளனர்.
சவுக்கு மரங்களின் கீழுள்ள தீப்பற்றக்கூடிய சருகுகளை முழுமையாக அகற்றல், சவுக்கு மரங்களின் கிளைகளை சுமார் 5 அடி உயரம் அளவுக்கு அகற்றல் உள்ளிட்ட செயற்பாடுகள் இதன்போது மேற்கொள்ளப்படும். கீழ் மட்டத்திலுள்ள கிளைகளை அகற்றும் போது, காட்டுக்கு தீவைப்பவர்களை இலகுவாக இனங்காணக்கூடியதாக இருக்கும்.
மணற்காட்டில் தற்போது சுமார் 500 ஏக்கரில் சவுக்கு காடு அமைந்துள்ளது. இதனைப் பாதுகாப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமாக இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago