2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

‘சித்த மருத்துவம் மறைந்து கொண்டிருக்கின்றது’

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பாரம்பரிய சித்த மருத்துவம், பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து மறைந்து கொண்டிருப்பதோடு ,பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மகத்தும் மற்றும் தூயத்தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிவடைந்து செல்வதாக, வடமாகாண சுகாதார  அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

எனவே அவற்றை கட்டிக் காக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில்  சித்த மருத்துவத்தின் பாரம்பரியம் மற்றும் வடக்கு மாகாணத்தில் சித்த மருத்துவத்தின் வளர்ச்சியும், அடைவுகளும் தொடர்பாக தயாரிக்கப்பட்ட 'அகத்தியன் அவிழ்தம்' ஆவணப்படம் வெளியீட்டு விழாவும் பாராட்டு நிகழ்வும் நேற்று  (10) காலை யாழ்ப்பாணம் பொதுநூலக கோட்போர் கூடத்தில் நடைபெற்றன.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .