2025 ஜூன் 04, புதன்கிழமை

சின்னம் சூட்டும் நிகழ்வு

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வன்னிக்குறோஸ் திரிசாரணர் அங்குரார்பண நிகழ்வும் சின்னம் சூட்டும் நிகழ்வும் மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் நேற்று (02) நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சுகாதார அமைச்சின் சமூகநல வைத்திய நிபுணர் வ.முரளி, வடமாகாண சாரணிய தலைமைப் பணிமனை ஆணையாளர் என்.சௌந்திராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது 70 மாணவர்களுக்கு சாரணர் சின்னம் சூட்டி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .