Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 ஜூன் 28 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று ஊக்குவிப்பு தொகை மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையில் மன்னார் ஆஹாஸ் விடுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரம கலந்து கொண்டார்.
நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 9 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உற்பட பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன் போது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், குற்றச் செயல்களை தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிறந்த சேவையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டு ஊக்குவிப்பு தொகை மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
9 hours ago