Editorial / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
போதிய வசதிகள் இன்மை மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகளின் அத்துமீறல்கள் போன்ற காரணங்களால், மக்களுக்கு நிறைவான சேவைகளை வழங்குவதற்கு தடையாகவுள்ளதாக, இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முல்லைத்தீவு மாவட்டச் சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் கருத்துரைத்த சாலை நிர்வாகம், முல்லைத்தீவு சாலையில், தற்போது சேவைக்குட்படுத்தப்படுகின்ற பஸ்கள் நீண்ட காலம் பயன்படுத்தப்பட்ட பழைய பஸ்களெனவும் அத்துடன், பொறியியலாளர்கள் உள்ளிட்ட ஆளணிகள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தது.
அத்துடன், முல்லைத்தீவு சாலைக்கு, 32 வரையான பஸ்கள் தேவையாக உள்ள போதும், 24 பஸ்களே உள்ளதாகத் தெரிவிதத் நிர்வாகம், இதில் 20 பஸ்களே சேவைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறியது.
10 minute ago
14 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
53 minute ago