2025 ஜூன் 30, திங்கட்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கத்தை முன் மாதிரியாகக் கொண்டு எயிட்ஸ் மற்றும் மலேரியா நோய்களை அழித்தொழிப்பதற்கான கருத்திட்ட உலக நிதியத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் இன்று திங்கட்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மக்களின் வைத்திய தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன் சிலாபத்துறை பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, முசலி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நானாட்டான் பிரதேச வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு, சிறுநாவற்குளம் பிராந்திய மலேரியா தடை இயக்கம், எருக்கலம் பிட்டி பிரதேச வைத்தியசாலையின்  வெளி நோயாளர் பிரிவு, பேசாலை பிரதேச வைத்தியசாலையின்  வெளி நோயாளர் பிரிவு ஆகியவற்றுக்கான புதிய கட்டடங்கள் இன்று  திங்கட்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்டடங்களும் சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமாக 180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த 6 நிலையங்களும் இன்று திங்கட்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வழிகாட்டலின் கீழ், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம் தலைமையில் குறித்த கட்டடங்கள் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான  சட்டத்தரணி எஸ்.பிறிமுஸ் சிறாய்வா, வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிப்பாளர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், வைத்திய அத்தியட்சகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மீள்குடியேறிய மக்களின் அத்தியவாசிய தேவைகளில் ஒன்றான  வைத்தியத் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாக  கொண்டு மேலதிக சுகாதார வைத்திய தேவையை மேற்கொள்ளும் நடவடிக்கையை மன்னார் மாவட்டத்தில் வட மாகாண சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X