Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 மே 13 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.அரசரட்ணம்
முல்லைத்தீவு, நந்திக்கடல் நீரேரியில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட 8 மீனவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன், நேற்று வியாழக்கிழமை (12) தீர்ப்பளித்தார்.
முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் மற்றும் சட்டவிரோதமான முறையில் தொழிலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்கான மீனவர்கள் அடங்கிய முகாமைத்துவக் குழுக்களும் இணைந்து கடந்த 11ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையில் அனுமதியின்றியும், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 8 மீனவர்கள் பிடிக்கப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 120 கூட்டு வலைகள், 25 தொகுதி தங்கூசி வலைகள் மற்றும் 32 தொகுதி முக்கூட்டு வலைகள் என்பன கைப்பற்றப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago