2025 மே 05, திங்கட்கிழமை

தடை உத்தரவு நீடிப்பு

Niroshini   / 2020 நவம்பர் 23 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில், மாவீரர் தினத்தை நினைவு கூர மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு, இன்று (23) நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில், மாவீரர் தின நினைவேந்தல்களை மேற்கொள்வதற்கு, தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் உள்ளிட்ட பலருக்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் மன்னார் நீதிமன்றத்தில், இன்று (23) நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் நேற்றுக் காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த உத்தரவை வழங்க  நீதவான் நீதிமன்றத்துக்கு, சட்டத்திலே நியாயதிக்கம் கொடுக்கப்படவில்லை என, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

மேலும், பொறுப்பானவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் எந்த சட்டத்தையும் மீற மாட்டோம், சுகாதார நடை முறைகளை கையாளுவோம், பொது நிகழ்வை நடத்தினால் சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெற்றுச் செய்வோம் என்கின்ற உத்தரவாதங்களையும் நீதிமன்றத்துக்கு வழங்கி தடை உத்தரவை நீக்குமாறு கோரி இருந்தனர்.

எனினும், குறித்த தடை உத்தரவை நீக்க மறுத்த நீதவான், தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கின்ற காரணத்தால் குறித்த நிகழ்வுகளை நடத்த முடியாது எனவும், கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தான நிலைமையில் இருப்பதாலும் மக்கள் ஒன்று கூடினால் குறித்த தொற்று பரவக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றமையாலும் ஏற்கெனவே பொலிஸார் ஊடாக வழங்கப்பட்ட உத்தரவுகளை நீடிப்பதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X