2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தண்ணீரூற்று பாடசாலைகளுக்கு புதிய கட்டடங்கள்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட அளம்பில் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், தண்ணீரூற்று இந்து ஆண்கள் கலவன் ஆண்கள் பாடசாலை ஆகியவற்றில் வடமாகாண கல்வி அமைச்சினூடாக வகுப்பறைக்; கட்டடங்களை அமைப்பதற்கு 13.42 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அளம்பில் றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் 120 அடி நீளமும் 25 அகலமும் கொண்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதியை அமைக்க 6.73 மில்லியன் ரூபாயும், தண்ணீரூற்று இந்து ஆண்கள் தமிழ் கலவன் பாடசாலையில் 120 அடி நீளமும், 25 அடி அகலமும் கொண்ட கட்டடத் தொகுதி அமைக்க 6.69 மில்லியன் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பாடசாலை கட்டடங்கள் அமைக்கும் பணியானது இன்னும் 120 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படும் என மாகாண கல்வி அமைச்சு கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X