Niroshini / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
கேப்பாபிலவு 59ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கம்பஹா - மினுவான்கொட பிரதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவு - கேப்பாபிலவு 59ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில், 161 பேர் 8ஆம் திகதியன்று தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்டனர்.
இவர்களில் முதற்கட்ட மாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசேததனையில் நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து அவர்கள் அநுராதரபுரம் பகுதியில் உள்ள கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள். ஏனையவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago