2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தமிழக உறவுகளுக்கு உதவ முன்வாருங்கள்: செல்வம் எம்.பி

George   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்


கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் எமது தமிழக உறவுகளுக்கு உதவ வடக்கு-கிழக்கு தாயக மக்கள் உடனடியாக முன் வர வேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

'தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையின் காரணமாக எமது தமிழக உறவுகள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதை நாங்கள் அறியக்கூடியதாக உள்ளது. இத் துயர நேரத்தில் இவர்களுக்கு கை கொடுக்க வேண்டிய ஒரு தேவை எமக்கு உள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது எமது தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு பக்க பலமாக இருந்தவர்கள் தமிழக மக்கள். அவர்களை நாங்கள் ஒரு போதும் கை விட முடியாது. எமது தமிழக மக்கள் தற்போது இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள சம்பவம் எனக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு, கிழக்கு தாயக மக்களும் வேதனையடைந்துள்ளனர்.
எனவே எமது உறவுகள் தமது தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமான வெள்ளம் அதிகாரித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன் காரணமாக, பல ஆயரக்கணக்கான எமது உறவுகள் வெள்ளத்தில் சிக்சித் தவிக்கின்றனர். அத்துடன், நூற்றுக்கணக்கான எமது உறவுகள் வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்தள்ளனர். அவர்களுக்கும் எமது தாயக உறவுகள் சார்பாக அஞ்சலியை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

எப்போதும் இலங்கைத் தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக செயற்படும் தமிழக இன்று நிர்க்கதியாகி நிற்கும் இவ்வேளையில் அவர்களுக்கு கை கொடுப்பது எமது கடமை.

எனவே பாதிக்கப்பட்ட எமது தமிழக மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வடக்கு, கிழக்கு தாயக மக்கள் முன் வந்து அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும். அவர்களின் துயரத்திலும் நாங்கள் பங்கெடுப்போம்' என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X