2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தமிழர்களை அடிமைகளாக வைத்திருக்க அரசாங்கம் முயற்சி

Niroshini   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இலங்கையில் பயங்கரவாதத்தை நீக்குவோம் என கூறிக் கொள்கின்றார்களே தவிர, இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் முன்னாள் போராளிகள் பலர் தொடர்ந்தும் கைது செய்யப்படுகின்றமை தொடர்பாக கருத்து  தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னரும், வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் மறைமுகமாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்தியும் பத்திரிகைகளில் செய்திகள் வராத வகையிலும் மிக இரகசியமாக இச்சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

தமிழ் இளைஞர்கள் பலர் சிறையில் செத்துக்கொண்டிருப்பதாகவும் தமிழ் மக்கள் தங்களது சொந்த நிலங்களுக்கு போக முடியாமல் உள்ளார்கள் எனவும் குறிப்பிட்ட சிறிதரன் எம்.பி,
தமிழ் மக்களுடைய வாழ்வாதாரங்களில் இன்றும் மாற்றங்கள் ஏற்படவில்லை. அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கைதுகளுக்கு உட்படுத்தல் திடீரென வெள்ளைவான்களில் கடத்தப்படுதல் ஒரு யுத்த சூழ்நிலைக்குள் இன்றும் தமிழ் மக்கள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கள இனவாதிகளையும் பேரினவாதிகளையும் திருப்திப்படுத்துவதற்காக தமிழர்களை தொடர்ந்தும் அடிமைகளாகவே வைத்திருக்கின்ற முயற்சிகளை இந்த அரசாங்கமும் தொடர்ந்தும் மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X