சண்முகம் தவசீலன் / 2018 மார்ச் 29 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

வற்றாப்பளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், திருமணமாகி 2 மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேப்பாபுலவு சூரிபுரத்தைச் சேர்ந்த சண்முகலிங்கம் நிமலன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று முன்தினம் (27) புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று (28) உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago