2025 ஜூன் 02, திங்கட்கிழமை

தீயால் பாதிக்கப்பட்ட நாயாறு குடும்பங்களுக்கு வலைகள்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியில் தீயால் பாதிக்கப்பட்ட ஒன்பது மீனவக் குடும்பங்களுக்கும் மீன்பிடி வலைகளை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இன்று வழங்கி வைத்துள்ளார். 
 
முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில், இம்மாதம் 13ஆம் திகதி இரவு ஒன்பது தமிழ் மீனவக் குடும்பங்களுக்குச்சொந்தமான சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியுடைய மீன்பிடி உபகரணங்கள் தீ இட்டுக் கொழுத்தப்பட்டன.
 
இவ்வாறு நிர்க்கதி நிலைக்குத்தள்ளப்பட்ட கடற்தொழிலாளர்களை இன்று பிற்பகல் முல்லைத்தீவு நாயாறுப் பகுதிக்கு விஜயம் செய்த  சுவாமிநாதன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஆறு வலைகளை வழங்கி வைத்துள்ளார்;.
 
இதில் உரையாற்றிய  சுவாமிநாதன், " இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒன்பது மீனவக் குடும்பங்களுக்கு தலா  ஆறு வலைகள் வீதம் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் எனது அமைச்சின் ஊடாக மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மீன்பிடி உபகரணங்கள், வலைகள் போன்றவை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
 
இலங்கையின் கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு வட, கிழக்கு |மாகாணங்களைச் சேர்ந்தது. பெரும்பாலான மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இவற்றை அறிந்து எனது அமைச்சின் மூலமாக மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என்றும் கூறிக்கொள்கின்றேன்" என்றார். 
 
குறித்த நிகழ்வில்,  கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர், கடற்தொழில்சங்கப்பிரதிநிதிகள் மீனவர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X