2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

’துணுக்காயில் 205 ஏக்கருக்கு உரம் வேண்டும்’

Niroshini   / 2021 ஜூன் 15 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள 205 ஏக்கருக்கு, உரம் வழங்கப்பட வேண்டியுள்ளதாக, துணுக்காய் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் த.பிரியதர்சினி தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்போது தமது கமநல சேவை நிலையத்தில், உரம் முடிவடைந்து விட்தாகவும்  உரம் இன்னும் வரவில்லை எனவும் கூறினார்.

கல்விளான் விவசாயிகளுக்கும் உரம் வழங்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவித்த அவர், மொத்தமாக, 205 ஏக்கருக்கு உரம் வழங்க வேண்டியுள்ளதாகவும் உரம் வரும் வரையில் காத்திருப்பதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X