2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

துணுக்காய் பிரதேச சபையை கூட்டமைப்பு கைப்பற்றியது

Editorial   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கீதன் செல்வா

துணுக்காய் பிரதேச சபையினை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு இன்று (18) மாலை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது..
வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற தவிசாளர் தெரிவில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அ.பஞ்சலிங்கம் மற்றும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பெ.நடேசன் ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.
பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் 7 வாக்குகளை தமிழ்தேசியக்கூட்டமைப்பு பெற்று தவிசாளர் பதவியை கைப்பற்றியது.
உப தவிசாளருக்கான வாக்கெடுப்பும் பகிரங்க வாக்கெடுப்பாக இடம்பெற்றது.
இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் த.சிவகுமார் தெரிவுசெய்யப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X