2026 மே 06, புதன்கிழமை

தேர்தல் விதிமுறையை மீறினார் அங்கஜன்?

Editorial   / 2018 ஜனவரி 09 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் படம் மற்றும் கட்சியின் இலட்சிணை பொறிக்கப்பட்ட சிறிய மருந்து வழங்கும் துண்டு என்பவற்றை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டமை தொடர்பில், பருத்தித்துறை நீதிமன்றில், பருத்தித்துறை பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.  

இதற்கமைய, குறித்த வழக்கு, நேற்று (08) பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மன்றின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.  

இதன்போது, வைத்தியசாலைக்கு துண்டுகளை வழங்கிய நபரை கைதுசெய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு, நீதவான் உத்தரவிட்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .