2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நேர்த்திக்கடனை நிறைவேற்றச் சென்ற இளைஞன் பலி

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, ஒட்டுசுட்டான் தான்றோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து, தனது நேர்த்திக்கடனை நிறைவேற்ற பறவைக்காவடி எடுத்து வந்த இளைஞர் ஒருவர், உழவு இயந்திரம் கவிழ்ந்து இன்று வியாழக்கிழமை (21) காலை பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மம்மில் பிள்ளையார் ஆலய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக, ஒட்டுசுட்டான் தான்றோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து, குறித்த இளைஞன், பறவைக்காவடி எடுத்துக்கொண்டு ஆலயத்திலிருந்து பயணித்துள்ளார்.

இதன்போது, ஒட்டுசுட்டான் தான்றோன்றீஸ்வரர் ஆலய முன்றலில், உழவு இயந்திரம் கவிழ்ந்து குறித்த இளைஞன் பலியாகியுள்ளார்.

இடதுகரை முத்துஜயன் கட்டைச் சேர்ந்த 26 வயதுடைய வசந்தகுமார் கஜதீபன் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார். 

இந்த அனர்த்தத்தின் போது படுகாயடைந்த மற்றுமொரு இளைஞன் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X