2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நில அளவீட்டை நிறுத்தாவிட்டால் ஆயுதப் போராட்டமே வெடிக்கும்: சாந்தி எம்.பி

George   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தமிழர் தாயக பகுதிகளில் சூட்சுமமான முறையில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற நில அளவீடுகள் நிறுத்தப்படாவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டங்கள் கிளர்ந்தெழும்பும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வியாழக்கிழமை தெரிவித்தார்.

முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் தனியார் காணி ஒன்றை அனுமதியின்றி அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் சென்றபோது பிரதேச மக்களின் எதிர்ப்பினால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

யுத்தத்தினால் அனைத்துவித சொத்துக்களையும் இழந்த மக்களுக்கு தற்போது இருப்பது தங்களது பௌதீக சொத்துக்களே என்று குறிப்பிட்ட அவர், அவற்றையும் பறித்துக்கொள்ளும் முயற்சியில் இராணுவம் களமிறங்கியிருப்பது அனுமதிக்க முடியாத செயல்' என்றும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X