2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நிலையான அபிவிருத்தியை நோக்கி பெண்கள் நிகழ்வு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வவுனியா

வவுனியா பிரதேச செயலகம் 'நிலையான அபிவிருத்தியை நோக்கி பெண்கள்' என்ற தொனிப்பொருளில் கண்காட்சி மற்றும் மேடை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை  பிரதேச செயலாளர் கா. உதயராசா தேசியக்கொடியினை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்ட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
    
இதன்போது வவுனியா நகரசபை மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன் சிறார்களின் வரவேற்பு நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதனையடுத்து நகரசபை வளாகத்தில் பிரத்தியோகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பெண்களை வலுவூட்டும் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X