2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நெல்லுக்கு நியாயமான விலையை பெற்றக்கொடுக்க நடவடிக்கை

Sudharshini   / 2016 ஜனவரி 30 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை காலபோக நெற்செய்கையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில், நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றுடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டு, நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்காக மாவட்டச் செயலகத்தில் இருக்கும் நிதியும் பயன்படுத்தப்படவுள்ளது.

கடந்த முறை கொள்முதல் செய்யப்பட்ட ஒரு தொகுதி நெல்லும் கூட்டுறவுச் சங்கங்களிடம் காணப்படுவதாலும், அவர்களிடம் நெல்லை கொள்முதல் செய்வதற்கு தேவையான நிதியானது இல்லாத காரணத்தாலும் இம்முறை அவர்கள் நெல்லைக் கொள்முதல் செய்ய முன்வரவில்லை.

நெல் சந்தைப்படுத்தல் சபையும் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் இருப்பதால் களஞ்சியப்படுத்த வசதியில்லாமையால் கொள்முதல் செய்யவில்லை.

இதனால், அறுவடை செய்யப்படுகின்ற நெல்லில் 75 கிலோகிராம் எடையுள்ள சிவப்பு அரிசி நெல் 1,200 ரூபாய், சம்பா அரிசி நெல் 2,000 ரூபாய் என அதிகுறைந்த விலைக்கு தனியார் வர்த்தகர்கள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர் என ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X