2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நாளாந்தம் 20 ஆயிரம் லீற்றர் தண்ணீர் வேண்டும்

George   / 2016 மே 10 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திலுள்ள 11 கிராமஅலுவலர் பிரிவுகளுக்கு நாளாந்தம் 20 ஆயிரம் லீற்றர் குடிநீரை விநியோகிக்க வேண்டிய தேவையுள்ளது' என பூநகரிப் பிரதேச சபையின் செயலாளர் மு.இராஜகோபால் தெரிவித்தார்.

'கிளிநொச்சி மாவட்டத்தில், அதிகளவான மக்கள்  குடிநீர் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பிரதேசங்களில் ஒன்றாக பூநகரிப் பிரதேசம் காணப்படுகின்றது. 19 கிராமஅலுவலர் பிரிவுகளைக் கொண்ட இப்பிரதேசத்தில் சுமார் 11 கிராமஅலுவலர் பிரிவுகளில் குடிநீர்த் தட்டுபாடு தொடர்ந்தும் நிலவி வருகின்றது.

குடிநீர் தட்டுப்பான பிரதேசங்களுக்கு, பூநகரிப் பிரதேச சபையால் பௌசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் இடங்களில் போதுமான மற்றும் தரமான தண்ணீர் வசதி இன்மை, போதிய வாகன வசதிகள் இன்மை, மற்றும் வீதிகள் சீரின்மை என்பன பெரும் சவாலாக கானப்படுகின்றன' என அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X