2024 மே 04, சனிக்கிழமை

நகை திருடன் கைது

Freelancer   / 2023 ஜூன் 21 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியாவை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்  புதன்கிழமை  (21) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, குருமன்காடு பகுதியில்  உள்ள  இரண்டு வீடுகளில்   நகைகளை திருடியமை மற்றும் வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நகைகளை திருடியமை,  அத்துடன், ஒலிபெருக்கி திருடப் பட்டதாகவும்  வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில்  முறைப்பாடு செய்யப்பட்டது.  

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா,   சூசைப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து 10 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு அடகு  வைக்கப்பட்ட நிலையில்   நகையும் மீட்கப்பட்டதுடன், ஆலய ஒலிபெருக்கியும் மீட்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .