2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நடமாடும் சேவை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.என்.ஏஸ். பண்டார தலைமையில் ஈச்சங்குளம், கல்மடு, சாஸ்திரிகூளாங்குளம், புதுக்குளம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆவணங்களை இலகுவில் பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் சேவை, மறவன்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இன்று (07) நடைபெற்றது. 

தேசிய அடையாள அட்டை, பிறப்பு, இறப்பு, திருமணம், பொலிஸ் அறிக்கை மற்றும் காணி போன்ற ஆவணங்கள் இன்றி நீண்டகாலமாக வசித்துவந்த மக்களுக்கு ஆவணங்களைப் துரிதமாகப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் சேவை, பிற்பகல் 4.30 மணி வரை நடைபெற்றது. 

இதில் வவுனியா மற்றும் ஈச்சங்குளம் பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், கல்மடு, சாஸ்திரி கூளாங்களம், ஈச்சங்குளம், புதுக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம சேவையாளர்களும் கலந்துகொண்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .