2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நந்திக்கடலுக்கு சென்றவரை காணவில்லை

Niroshini   / 2021 ஜூன் 10 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில், கடற்றொழிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த,  5 பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ் (வயது 44) என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர், நந்திக்கடலில் மீன்பிடிப்பதற்காக நேற்று  (09) இரவு, வீட்டில் இருந்து சென்ற சிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என, உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .