2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நன்னீர் மீன் வளர்ப்பு ஆரம்பம்

George   / 2016 மே 11 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நன்னீர் மீன் வளர்ப்புத்திட்டத்தில் மேலும் ஒரு தொகுதி நன்னீர் மீன் குஞ்சுகள், நேற்று செவ்வாய்க்கிழமை(10) மாலை வளர்ப்புக்காக விடப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் மன்னார் பரப்பான் கண்டல் சிறுக்குளம் கிராமத்தில் 4.3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த நன்னீர் மீன் வளர்ப்புத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் பரப்பான் கண்டல் சிறுக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நன்னீர் மீன் வளர்ப்பு நிலையத்தில் குறித்த மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

சுமார் 22 ஆயிரம் நன்னீர் மீன் குஞ்சுகள் இவ்வாறு விடப்பட்டுள்ளதுடன் அவை 45 நாட்களுக்கு பின்னர் பிடிக்கப்பட்டு குளங்களில் விடப்படும்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகள் அடங்கிய குழுவினர் நேரில் சென்று மீன் வளர்பினை பார்வையிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X