2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

’நாய்களால் கால்நடைகள் அழியும் நிலை ஏற்படும்’

Niroshini   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - பூநகரி, இரணைதீவு பகுதியில், நாய்களால் கால்நடைகள் உயிரிழந்து வருவதாக, பூநகரி பிரதேச சபையின் உப தவிசாளர் மு.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

இவ்வாறு நாய்களால் கால்நடைகள் உயிரிழக்குமானால், எதிர்காலத்தில், இரணைதீவில் கால்நடைகள் அழிவதற்கான வழிகள் உருவாகும் எனவும், அவர் எச்சரித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இரணைதீவில் பெருமளவு கால்நடைகள் உள்ளன எனவும் இதேவேளை, கடற்படையினர் பல நாய்களை வளர்த்து வருகின்றனர் எனவும் கூறினார்.

இந்த நாய்களால் கால்நடைகளுக்கு உயிரிழப்பு ஏற்படுகின்றன எனத் தெரிவித்த அவர், இது தொடர்பாக கிராம அலுவலர், கால்நடை வைத்தியர், பூநகரி பிரதேச செயலாளர் உட்பட பல அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளோம் எனவும் கூறினார்.

கடற்படை அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக பொது மக்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், ஆனால் நாய்களால் கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்க முடியாது உள்ளது எனவும் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X